🌼"தமிழக யாவரும் கேளிர் கலை இலக்கிய மைய மாநிலக் குழுத் தேர்வு"🌼
🌼"தமிழக யாவரும் கேளிர் கலை இலக்கிய மைய மாநிலக் குழுத் தேர்வு"🌼
'மானுடம் பாடுவோம்! மனிதம் காப்போம்!' என்ற இலக்குடன் முற்போக்கு கலை இலக்கியத்தை முன்னெடுக்கும் நோக்கம் கொண்டது இம்மையம்; தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்தின் ஓர் அங்கம்.
பணிகள்:
1.யாவரும் கேளிர் கலை இலக்கிய மையம் புலனம் நடத்துதல்;
2.வாராந்திர இணையவழி வாசகர் சந்திப்பு;
3.மாதாந்திர யாவரும் கேளிர் ebook அல்லது இணையப் பக்கம்;
4.அவ்வப்போது மாணவர்களுக்கு போட்டி நடத்துதல்;
5.ஆறு மாதத்திற்கு ஒருமுறை நேரடி சிறப்பு சந்திப்பு;நூல் வெளியீடு, விருது வழங்கல் மற்றும் கலை இலக்கிய நிகழ்ச்சி;
24/10/24 வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தமிழக யாவரும் கேளிர் கலை இலக்கிய மைய மாநில அமைப்பாளர் விடியல் குகன் ஆகிய எனது தலைமையில் நடைபெற்ற ஜூம் இணைய வழி ஆலோசனைக் கூட்டத்தில் ஓராண்டிற்கான மாநிலக் குழுத் தேர்வு செய்யப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலக் குழுப் பொறுப்பாளர்கள் பின்வருமாறு:
1. திரு.திராவிடமணி: தேனி, மாநிலத் தலைவர்;
2. திருமதி.ஜெயா வேதாசலம், புதுக்கோட்டை, மாநிலத் துணைத் தலைவர்;
3. திருமதி.விமலா தேவி சக்தி, திருச்செங்கோடு, மாநிலச் செயலாளர்;
4. திருமதி.தனலட்சுமி ஆறுமுகம், சேலம், மாநிலத் துணைச் செயலாளர்;
5. திரு.சரவணன், நாமக்கல், மாநிலத் துணைச் செயலாளர் (பொருளாளர் பொறுப்பு).
புதிய மாநில குழு பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.இக்குழுவில் பயணிக்கும் அனைத்து தமிழ் உறவுகளும் பொறுப்பாளர்களுக்கு நல்லாதரவு நல்க அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
இப்படிக்கு
என்றும் அன்புடன்
உங்கள் அன்பன்
விடியல் குகன்.
மாநில அமைப்பாளர்,
தமிழக யாவரும் கேளிர்
கலை இலக்கிய மையம்.

கருத்துகள்
கருத்துரையிடுக